தொண்டியில் தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி சனிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மக்கள் சட்ட உரிமைக் கழகம், காவல் துறை இணைந்து நடத்திய இப்பேரணிக்கு மக்கள் சட்ட உரிமைக் கழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஹாஜா முகைதீன், தொண்டி காவல் ஆய்வாளர் பிரபு ஆகியோர் தலைமை வகித்தனர். இப்பேரணி தொண்டி காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை, நம்புதாளை வரை சென்று மீண்டும் தொண்டி சோதனைச் சாவடி வந்தனர். அதைத்தொடர்ந்து அங்கு வந்த வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் கருப்பு நிற வில்லைகள் ஒட்டப்பட்டன.
பின்னர், காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்காக 2 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், ராமநாதபுரம் வடக்கு மாவட்ட அமைப்பாளர் கிங்பீட்டர் நன்றி கூறினார்.