"நாட்டுப்புறக் கலைஞர்கள் இலவச  இசைக்கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம்'

நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளவர்கள் இலவச இசைக்கருவிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளவர்கள் இலவச இசைக்கருவிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
   இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:        ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் மதுரை மண்டலத்திற்கு உள்பட்டதாகும். இந்த நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கலைஞர்களுக்கு 2017-18 ஆம் ஆண்டுக்கான இலவச இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வழங்கப்படவுள்ளன. 
  எனவே நல வாரியத்தில் தவறாது புதுப்பித்துள்ள நாட்டுப்புற கலைஞர்கள் இலவச இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் பெற பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், பாரதி உலா முதல் தெரு, தல்லாகுளம், மதுரை-2 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com