பரமக்குடி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் புதன்கிழமை அனைத்து சங்கங்களின் சார்பில் 3 ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் என்.கே.ராஜன், நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் எஸ்.பி.ராதா, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வி.காசிநாததுரை, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற செயலாளர் ந.சேகரன், பி.எஸ்.என்.எல். ஓய்வூதிய சங்க செயலாளர் பி.ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு பி.எஸ்.என்.எல். 4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். பி.எஸ்.என்.எல். தொழிற்சங்க என்.எப்.டி.இ. கிளைச் செயலாளர் தமிழரசன் , ராமு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.