கமுதியில் சிறப்பு குறைதீர் கூட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கமுதி வருவாய் அலுவலர்அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் தென்னரசு, துணை வட்டாட்சியர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் முதியோர் உதவித் தொகை, இலவச பட்டா மாறுதல், இலவச வீடுகள் கோரி 10 மனுக்கள் பெறப்பட்டன. இதில் வருவாய் ஆய்வாளர் கீதா உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் கமுதி அருகே குடிக்கினியானில் அம்மா திட்ட முகாம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் மரகதமேரி தலைமையிலும், வருவாய் ஆய்வாளர் கீதா முன்னிலையிலும் நடைபெற்றது. முகாமில் வருமானம், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பயனாளிகள் சான்று கோரி மனுக்கள் பெறபட்டன.