கிழக்கு கடற்கரை சாலையில் 2 பைக்குகள் மீது கார் மோதல்; ஒருவர் சாவு-5 பேர் காயம்

திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினம் கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை  2 மோட்டார் சைக்கிளில் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினம் கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை  2 மோட்டார் சைக்கிளில் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
திருவாடானை அருகேயுள்ள ஆவுடையார்கோயிலைச் சேர்ந்தவர் சீனிவாசன்(42), அதே ஊரை சேர்ந்த குஞ்சுதபாதம் (27), முத்துகுடாவைச் சேர்ந்த ஸ்ரீராம் (22) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், முத்துக்கிடாவைச் சேர்ந்த மனோஜ்குமார், சுரேஷ், ராமன் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் எஸ்பி. பட்டினம் சென்றனர். 
பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பும் போது கடற்கரை சாலையில் பின்னால் வந்த கார் இரு மோட்டார் சைக்கிள்களிலும்  மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் மோட்டார் சைக்கிளை ஒட்டிய குஞ்சுதபாதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 5 பேரும் காயம் அடைந்தனர். 
அவர்கள் தொண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சீனிவாசன் அளித்தப் புகாரின் பேரில் எஸ்.பி. பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து தப்பிச்சென்ற காரை தேடிவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com