பாம்பன் சாலைப் பாலத்தின் உறுதித்தன்மை ஆய்வு

பாம்பன் சாலைப் பாலத்தின் உறுதித் தன்மை குறித்து தேசிய நெடுஞ்சாலை பொறியாளர் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.

பாம்பன் சாலைப் பாலத்தின் உறுதித் தன்மை குறித்து தேசிய நெடுஞ்சாலை பொறியாளர் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்- ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் 2.3 கிலோ மீட்டர் தொலைவில் உயர் மட்ட சாலைப் பாலம் உள்ளது.  கடந்த 1988 ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாலத்தின் உறுதித் தன்மை குறித்து பொறியாளர்கள் குழுவினர் ஆண்டு தோறும் ஆய்வு செய்து வருகின்றனர். இப்பாலம் பயன்பாட்டிற்கு வந்து 31 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் சனிக்கிழமை தேசிய நெடுஞ்சாலைத்துறையின் பொறியாளர் குழுவினர் அதி நவீன கருவிகள் மூலம் பாலத்தின்  மையப் பகுதியில் ஆய்வு செய்தனர். பாலத்தின் இணைப்புப் பகுதி, தூண்கள் ஆகியவற்றின் உறுதித்தன்மை குறித்து குழுவினர் ஆய்வு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com