மர்மக்காய்ச்சல்: சிவகங்கையில் மேலும் 2 பேர் சாவு

சிவகங்கை மாவட்டத்தில் மர்மக்காய்ச்சலுக்கு இளைஞர் உள்பட மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.


சிவகங்கை மாவட்டத்தில் மர்மக்காய்ச்சலுக்கு இளைஞர் உள்பட மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.
சிவகங்கையில் உள்ள பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜெகநாதன்(60). இவர்,வருவாய்த் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். சிவகங்கை அருகே உள்ள குமாரப்பட்டியைச் சேர்ந்த செளந்தரபாண்டியன் மகன் மாயமலை (20), கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி அவர்திங்கள்கிழமை மாலை உயிரிழந்தார். கடந்த சனிக்கிழமை சிவகங்கையில் எல்ஐசி நிறுவனஅலுவலர், திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கத்தில் 5 வயது சிறுவன் ஆகிய இருவரும் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
மாவட்டம் நிர்வாகம் சார்பில் போதிய விழிப்புணர்வு பணிகள் நடத்தப்படாததால் காய்ச்சல் பரவி வருவதாக என பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வுப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com