கஜா புயல்: அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்தி வைப்பு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரி மாணவர்களுக்கு வியாழக்கிழமை (நவ. 15) நடைபெறவிருந்த

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரி மாணவர்களுக்கு வியாழக்கிழமை (நவ. 15) நடைபெறவிருந்த தேர்வுகள் கஜா புயலை முன்னிட்டு ஒத்திவைக்கப்படுவதாக பல்கலை. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் ஹா. குருமல்லேஷ் பிரபு புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
கஜா புயலை முன்னிட்டு வியாழக்கிழமை  நடைபெறவிருந்த காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள் மற்றும் அனைத்துத் துறைகளுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. 
இந்தத் தேர்வுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com