மானாமதுரை கூட்டுறவு பண்டகசாலைக்கு விருது

சிறந்த கூட்டுறவு அமைப்பாக தேர்வு செய்யப்பட்ட மானாமதுரை கூட்டுறவு பண்டக சாலைக்கு அமைச்சர் ஜி.பாஸ்கரன் வியாழக்கிழமை விருது வழங்கினார்.

சிறந்த கூட்டுறவு அமைப்பாக தேர்வு செய்யப்பட்ட மானாமதுரை கூட்டுறவு பண்டக சாலைக்கு அமைச்சர் ஜி.பாஸ்கரன் வியாழக்கிழமை விருது வழங்கினார்.
   மானாமதுரை கூட்டுறவு பண்டகசாலை நிர்வாகத்தின் கீழ் நகரில் ஏராளமான ரேஷன்கடைகள், மண்ணெண்ணெய் நிலையம், மருந்தகம் ஆகியவை சிறந்த முறையில் லாபத்துடன் செயல்பட்டு வருகின்றன. இக்கூட்டுறவு பண்டகாலையின் தலைவராக சின்னை மாரியப்பன் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், மானாமதுரை கூட்டுறவு பண்டகசாலை மாவட்டத்தில் இந்தாண்டுக்கான சிறந்த கூட்டுறவு பண்டகசாலையாக தேர்வு செய்யப்பட்டது. சிவகங்கையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் பாஸ்கரன் சிறந்த கூட்டுறவு அமைப்புக்கான விருதை மானாமதுரை கூட்டுறவு பண்டகசாலைக்கு வழங்கிப் பாராட்டினார். இந்த விருதை அதன் தலைவர் சின்னை மாரியப்பன் பெற்றுக் கொண்டார்.       பண்டகசாலைக்கு இந்த விருது கிடைக்க சிறந்த முறையில் பணியாற்றிய கூட்டுறவு பண்டகசாலை சார்புடைய பணியாளர்கள் தான் காரணம் என சின்னை மாரியப்பன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com