அண்ணா பல்கலைக்கழக 16-வது மண்டல அளவிலான கபடிப்போட்டிகள் காரைக்குடி அருகே கீரணிப்பட்டியில் உள்ள கிட் அன்ட் கிம் பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகள் வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது.
சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை 27 பொறியியல் கல்லூரிகளின் அணிகளைச் சேர்ந்த 250 வீரர்கள் இப்போட்டிகளில் விளையாடுகின்றனர். போட்டிகளை கிட் அன்ட் கிம் கல்விக்குழுமத்தின் தலைவர் வீ. அய்யப்பன் தொடக்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்துத்தெரிவித்தார். இறுதிப்போட்டி வியாழக்கிழமை (செப். 20) நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து பரிசளிப்பு விழாவும் நடைபெறும். தொடக்க நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் கலியமூர்த்தி, அண்ணாமலை மற்றும் பேராசிரியர்கள், பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள் மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.