சிவகங்கையில் இம்மாதம் 28 ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சி.கே.சர்மிளா (விவசாயம்) புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் வரும் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் அனைத்துத் துறை உயர் அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை மனு மூலமாகவும், நேரடியாகவும் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.