சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அ.ம.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள அண்ணா சிலை அருகே நடைபெற்ற இக்கூட்டத்துக்கு சிவகங்கை மாவட்டச் செயலர் கே.கே.உமாதேவன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் சொக்கநாதன், மாவட்ட நெசவாளர் அணிச் செயலர் சோமசுந்தரம், வெங்கடேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அ.ம.மு.க கொள்கை பரப்புச் செயலர் தங்க.தமிழ்செல்வன் சிறப்புரையாற்றினார். முன்னதாக திருப்பத்தூர் ஒன்றியச் செயலர் முருகானந்தம் வரவேற்றார். கூட்டத்தில் மாநில ஜெ. பேரவைச் செயலரும், மானாமதுரை சட்டப் பேரவை தொகுதி உறுப்பினருமான மாரியப்பன்கென்னடி, அமைப்புச் செயலர் சோழன்பழனிச்சாமி, இரவுசேரி.முருகன், ஒன்றிய செயலர்கள் சிவராஜ், சரவணன், மாவட்ட இளைஞர் பாசறைச் செயலர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகரச் செயலர் ரகீம் நன்றி கூறினார்.