காரைக் குடி அருகே புதுவயல் பகுதியில் வரும் திங்கள்கிழமை (செப். 24) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்குடி மின் கோட்டச் செயற்பொறியாளர் பி. ஜான்சன் தெரிவித்திருப்பதாவது: சாக்கவயல் (புது வயல்) துணை மின்நிலையத்தில் வரும் திங்கள்கிழமை (செப். 24) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே புதுவயல், கண்டனூர், மித்திராவயல், பெரியகோட்டை, சாக்கோட்டை, பீர்க்கலைக்காடு, வீரசேகரபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று
தெரிவித்துள்ளார்.