தேவகோட்டை அருகே மானம்பூவயல் கிராமத்தில் மர்மநபர்கள்
வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை திருடியுள்ளனர்.
மானம்பூவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். தற்போது கரூர் மாவட்ட தேவர் பேரவைத் தலைவராக உள்ளார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வந்து வீட்டை பூட்டிவிட்டு கரூர் சென்றுவிட்டார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் வீடு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கணேசன் வந்து பாத்தபோது வீட்டில் இருந்த 20 பவுன் நகை, சிறுசேமிப்பு பணம் திருடு போயிருந்தன. தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்தில் இதுகுறித்து அளித்தப் புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.