விபத்தில் இறந்த 2 மீனவர்கள் குடும்பங்களுக்கு ரூ.53 லட்சம் இழப்பீடு: தேவகோட்டை நீதிமன்றம் உத்தரவு

விபத்தில் இறந்த 2 மீனவர்கள் குடும்பத்துக்கு ரூ.53 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனத்துக்கு தேவகோட்டை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

விபத்தில் இறந்த 2 மீனவர்கள் குடும்பத்துக்கு ரூ.53 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனத்துக்கு தேவகோட்டை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
  தொண்டி அருகே உள்ள நம்புதாளையைச் சேர்ந்த ராமர் மகன் ராகவன் (24). அதே பகுதியைச் சேர்ந்த வில்லாயுதம் மகன் உத்திரக்குமார் (30). இவர்கள் இருவரும் கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டார் சைக்கிளில் நம்புதாளையிலிருந்து ஜெகதாப்பட்டினத்திற்கு சென்றபோது  லாரி மோதியதில் உயிரிழந்தனர். கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்தது.
 இதில் ராகவன் இறந்ததற்கு இழப்பீடு கேட்டு அவரது பெற்றோர் தேவகோட்டை  சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மதுரம், ராகவன் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.27 லட்சத்து 46 ஆயிரத்து 600 -ஐ வட்டியுடன் வழங்க யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். 
 மேலும் மற்றொரு மீனவர் உத்திரக்குமார்  இறந்ததற்கு இழப்பீடு கேட்டு அவரது மனைவி போதும் பொன் வழக்குதொடர்ந்திருந்தார். இவ்வழக்கில், உத்திரகுமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சத்து 95 ஆயிரத்து 400 -ஐ வட்டியுடன்  வழங்க காப்பீடு நிறுவனத்துக்கு  நீதிபதி கிருபாகரன் மதுரம்  உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com