சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்

சிவகங்கையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தேரோட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

சிவகங்கையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தேரோட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சி அம்மன் கோவிலுக்குள் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இதையடுத்து, இவ்விழா கடந்த மார்ச் 12 ஆம் தேதி காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து தினசரி சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, வீதி உலா நடைபெற்றது.முக்கிய விழாவான தேரோட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
 தொடர்ந்து, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி தேரில் எழுந்தருளினர்.தேரடியிலிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்ட தேர் அரண்மனை வாசல், நேரு பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பின் இரவு 7.50 மணிக்கு நிலைக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com