ராஜபாளையம் அருகே மணல் திருட்டு: 3 பேர் கைது

ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் ஆற்று மணல் திருடியதாக மூன்று பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் ஆற்று மணல் திருடியதாக மூன்று பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே தேவதானம் அசையாமணி விலக்கு பகுதியில் தளவாய்புரம் காவல் உதவி ஆய்வாளர் காஜாமொய்தீன் மற்றும் போலீஸார் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனங்களை வழிமறித்து சோதனையிட்டபோது, சாக்கு மூட்டைகளில் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. 
இதையடுத்து மணல் மூட்டைகள், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸார் ராதாகிருஷ்ணன்(43),  மூர்த்தி (48), முத்துசாமியாபுரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (23) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்யோடிய குருவையா என்பவரை தேடிவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com