ராஜபாளையத்தில் பழுதான தார்சாலைகளை செப்பனிட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையத்தில் தார்ச் சாலைகள் மிகவும் மோசமாக பழுதடைந்துள்ளன. இதில் குறிப்பாக ராஜபாளையம் நகர் சங்கரன் கோவில் முக்கு பகுதியில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் உள்ள சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இப்பள்ளங்களால் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் சாலை பகுதியில் உள்ள பள்ளத்தில் மழைக் காலங்களில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே இச்சாலையை விரைவில் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.