அருப்புக்கோட்டை பெரியபுளியம்பட்டியில் உள்ள கம்மவார் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இலவசக் கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டியைச் சேர்ந்த சங்கரா கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை தலைமை வகித்தார். நிகழ்ச்சியின்போது சங்கரா கண் மருத்துவனை மருத்துவர்கள் நோயாளிகளைப் பரிசோதனை செய்தனர்.
இதில், கண்நீர் அழுத்த நோய், விழித்திரை நோய், பார்வை குறைபாடு, கண்புரை நோய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 52 பேர் கண்புரை அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் விவேகானந்தா கேந்திராவின் தன்னார்வலர் சரவணன், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.