பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், பாஜகவின் வழக்குரைஞர் பிரிவு சார்பில் பட்டடாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
மத்திய அரசின் விருதுநகர் மாவட்ட வழக்குரைஞர் கே.சாந்தகுமார், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலாளர் சி.நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்கும் வழக்குரைஞர்களுக்கும் இனிப்புகள் வழங்கினர். மேலும் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். நிகழ்ச்சியில் மூத்த வழக்குரைஞர் சிவராமகிருஷ்ணன், வழக்குரைஞர்கள் போத்தி, ராஜரத்தினம், மாவட்ட பாஜக மகளிரணி செயலாளர் பி.பேச்சியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.