விருதுநகரில் மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தூய்மை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விருதுநகரில் மாரியம்மன் கோயில் அருகே உள்ள தேசபந்து மைதான வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் சுகாதாரம் என்பது ஒவ்வொருவரின் பொறுப்பு, எனவே தூய்மை பாரத இயக்கத்தில் அனைத்து பொதுமக்களும் பங்கேற்க வேண்டும்.
திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் கழிப்பதை தடுக்கும் வகையில் அனைவரது வீடுகளிலும் கழிப்பறை கட்ட வேண்டும். மேலும், பொதுஇடங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்களில் பொதுமக்களின் பங்களிப்புடன் தூய்மையை பராமரிக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர். அதன் பின்னர் மாணவர்கள் அனைவரும் தூய்மை குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் சுற்றுலாத் துறை அலுவலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.