திருவண்ணாமலை கோயிலில் துப்பரவுப் பணி

சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி வணிகவியல்துறை சார்பில், திருவண்ணாமலை

சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி வணிகவியல்துறை சார்பில், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலின் மலைப்பகுதிகளில் வியாழக்கிழமை மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட் டனர்.
இக்கோயிலில் புரட்டாசி சனிவார விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகள் 30 பேர் கோயிலின் வெளிப்பகுதிகளில் கிடந்த குப்பைகள் மற்றும் பாலிதீன் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர். மேலும் கோயிலுக்கு வந்த பக்தர்களிடம்,  பாலித்தீன் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டுப்பிரசுரங்களை வழங்கினர். இதற்கான ஏற்பாட்டினை வணிகவியல் துறைத்தலைவர் ஜோசப்சேவியர் செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com