ஸ்ரீவிலி.யில் காங்கிரஸ் கட்சியின் "சக்தி' திட்ட முகாம்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் அனைவரையும் இணைக்கும் "சக்தி' திட்ட முகாம், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் அனைவரையும் இணைக்கும் "சக்தி' திட்ட முகாம், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பாக செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்டத் தலைவர் ச. தளவாய்பாண்டியன் தலைமை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகரத் தலைவர் பட்சிராஜா வி.சி. வன்னியராஜ் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் பெ. பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம் முகாமை, சக்தி திட்ட மாநில துணை அமைப்பாளர் லட்சுமி ராமசந்திரன் தொடக்கிவைத்து, அனைவரும் இத்திட்டத்தில் இணைவதன் அவசியம் குறித்துசிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், மாவட்டப் பார்வையாளர் எஸ்.கே.டி.பி. காமராஜ், வட்டாரத் தலைவர்கள் லட்சுமணன், குருவையா, பேரூராட்சித் தலைவர் மணிகண்டன், மாவட்ட நிர்வாகிகள் சுப்பையா, முருகேசன் மற்றும் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை, சக்தி திட்ட மாவட்ட அமைப்பாளர் ரங்கராஜன் மற்றும் நகர அமைப்பாளர் சுரேஷ் ரத்தினகுமார் ஆகியோர் செய்திருந்தனர். மாவட்ட பொதுச் செயலர் செல்வராஜ் நன்றி கூறினார். முன்னதாக, காஷ்மீர் புல்வாமாவில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் நீத்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com