விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்குத்தெருவில் உள்ள ஆழ்துளைக் கிணற்றை ஆழப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை நகராட்சி 31 ஆவது வார்டில் உள்ளது தெற்குத்தெரு. இப்பகுதியில் தனியார் தொடக்கப் பள்ளி அருகே பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துளைக்கிணறு உள்ளது. இதில் நீர்வரத்து பெருமளவிற்குக் குறைந்து விட்டது.
இதனால் இப்பகுதி மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். மேலும் தனியாரிடம் அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே தெற்குத் தெருவில் உள்ள ஆழ்துளைக் கிணற்றை ஆழப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.