சிவகாசி அருகே வியாழக்கிழமை உரிய அனுமதியின்றி மதுபாட்டிகளை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருத்தங்கல்- செங்கமலநாச்சியாபுரம் சாலையில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் நடந்து சென்றனராம். போலீஸார் அவர்களை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மதுபாட்டில்கள் இருந்ததாம். விசாரணையில் அவர்கள் திருத்தங்கல் சுப்பிரமணியசுவாமி கோயில் தெரு நடராஜன் (40), கிருஷ்ணன்கோயில் மாடசாமி(36) என தெரியவந்தது.
திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்த 24 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.