திமுக வேட்பாளரை ஆதரித்து சாத்தூரில் இன்று வைகோ பிரசாரம்

சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரை ஆதரித்து, மதிமுக பொதுச் செயலர் வைகோ சனிக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறார்.

சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரை ஆதரித்து, மதிமுக பொதுச் செயலர் வைகோ சனிக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறார்.
 சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.வி. சீனிவாசன். இவரை ஆதரித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ, சாத்தூர் தொகுதியிலுள்ள படந்தால், சாத்தூர் நகர், தாயில்பட்டி, ஆலங்குளம், சத்திரபட்டி, வ.உ.சி. நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களிடையே வாக்குகளை சேகரிக்கிறார்.
இதையடுத்து, ராஜபாளையம் பகுதியில் இரவு 8 மணிக்கு வைகோ பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது என, திமுக மற்றும் மதிமுக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். 
திமுக வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மார்ச் 28 ஆம் தேதியும் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஏப்ரல் 4 ஆம் தேதியும் வாக்கு சேகரிக்கின்றனர். அதேபோல், அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஏப்ரல் 5 ஆம் தேதி வாக்கு சேகரிக்க உள்ளதாக, அக்கட்சிகளின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com