திருவாரூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் இன்று குழந்தைகள் தின விழா

திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், குழந்தைகள் தின விழா புதன்கிழமை (நவ.14) கொண்டாடப்பட உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், குழந்தைகள் தின விழா புதன்கிழமை (நவ.14) கொண்டாடப்பட உள்ளது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதிபெற்று, திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் அரசினர் நடுநிலைப்பள்ளிகளிலும், ஊராட்சிய ஒன்றியத் தொடக்கப்பள்ளிகளிலும் இந்த விழா நடைபெற உள்ளது. குழந்தைகள் தினவிழா கொண்டாட்டத்தின்போது, மாணவ- மாணவிகளிடையே கட்டுரை, பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, திருக்குறள், பொது அறிவு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன. இது தவிர மாணவர்கள் அனைவருக்கும் எழுதுப் பொருள்களும், இனிப்புகளும் விநியோகிக்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com