திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை கோலாட்ட உத்ஸவம் நடைபெற்றது.
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கோலாட்ட உத்ஸவம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழா, நவ. 6-ஆம் தேதி தொடங்கி கோலாட்ட உத்ஸவம் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான, செவ்வாய்க்கிழமை, சன்னிதியிலிருந்து கையில் சாட்டை குச்சி ஏந்தி ராஜகோபாலசுவாமி, கிருஷ்ணர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் கோலாட்டம் அடித்து வரவேற்றனர். பின்னர் கோயிலில் முற்றவெளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணபிரேமி குழுவினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோலாட்டம் அடித்து சுவாமியை வழிபட்டனர். அப்போது, சுவாமிக்கு விசேஷ தீபாராதனை காண்பிக்கப்பட்டது.