எட்டுக்குடி முருகன் கோயிலில் தெய்வானை திருக்கல்யாணம்

திருத்துறைப்பூண்டி அருகே  உள்ள எட்டுக்குடி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி தெய்வானை திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி அருகே  உள்ள எட்டுக்குடி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி தெய்வானை திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கந்த சஷ்டி விழா நவ. 8-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை (நவ.13) நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, முருகப் பெருமான்- தெய்வானை திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி நடைபெற்ற மாப்பிள்ளை அழைப்பில் முருகப் பெருமான் குதிரை வாகனத்தில் அழைத்துவரப்பட்டார். தொடர்ந்து சீர்வரிசை எடுத்து வருதல், நலுங்கு, காசியாத்திரை, யாத்திராதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 பின்னர், மாலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது. கண்ணன் சிவாச்சாரியார், ஹரிஹரன் சிவாச்சாரியார் உள்ளிட்டோர் திருக்கல்யாணத்தை நடத்திவைத்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, வள்ளி திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. சனிக்கிழமை மஞ்சள் நீராட்டு, ஊஞ்சல் உத்ஸவத்துடன் விழா நிறைவுபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com