திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் சாலைகளில் சாய்ந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி ஊழியர்கள் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
கஜா புயலின் ஆக்ரோஷத்தால் கூத்தாநல்லூர் நகராட்சிப் பகுதியில் நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. குறிப்பாக ஏ.ஆர்.சாலை , மருத்துவமனை சாலை, புதுப் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் இருந்த பெரும்பாலான மரங்கள் வேரோடும், கிளைகள் முறிந்தும் சாலையில் சாய்ந்து கிடந்தன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த மரங்களை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.