கூத்தாநல்லூரில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி ஊழியர்கள்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் சாலைகளில் சாய்ந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி ஊழியர்கள் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் சாலைகளில் சாய்ந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி ஊழியர்கள் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
கஜா புயலின் ஆக்ரோஷத்தால் கூத்தாநல்லூர் நகராட்சிப் பகுதியில் நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. குறிப்பாக ஏ.ஆர்.சாலை , மருத்துவமனை சாலை, புதுப் பாலம் உள்ளிட்ட  பகுதிகளில் சாலையோரங்களில் இருந்த பெரும்பாலான மரங்கள் வேரோடும், கிளைகள் முறிந்தும் சாலையில் சாய்ந்து கிடந்தன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த மரங்களை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com