திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, அதிர்ச்சியில் உயிரிழந்த திமுகவை சேர்ந்த இருவரின் குடும்பத்துக்கு திங்கள்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.
கருணாநிதியின் மறைவு செய்திக்கேட்டு வலங்கைமான் ஒன்றியம் இருகரை கிராம திமுக முன்னாள் கிளைச் செயலர் சுப்பிரமணியன் (47) மற்றும் கீழநல்லம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மனைவி பிரேமா (54) ஆகியோர் அதிர்ச்சியில் உயிரிழந்தனர். இவர்களுக்கு திமுக தலைமை அலுவலகம் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்க அறிவித்தது. அந்த தொகைக்கான காசோலையை உயிரிழந்த சுப்பிரமணியன் மனைவி உஷாராணி மற்றும் பிரேமாவின் கணவர் ராமலிங்கத்திடம் வழங்கினார் திருவாரூர் மாவட்ட செயலர் பூண்டி
கே. கலைவாணன்.