திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் கட்டுமான சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய சங்க மாவட்ட தலைவர் பொன். கோவிந்தராசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எம். ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பொருளாளர் எம். முத்துகிருஷ்ணன் வரவேற்றார். சங்க வரவு- செலவு கணக்கு விவரங்களை மாவட்ட தலைவர் ஆர். சேகர் சமர்ப்பித்தார்.
தீர்மானங்கள்: மாவட்டம் முழுவதும் அனைத்துக் கட்டடத் தொழிலாளர்களையும் சங்கத்தில் சேர்க்க வேண்டும், கட்டுமானத் துறைக்கு என தனியாக ஓர் அமைச்சரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் கே. மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர செயலாளர் யு. ராகவன் நன்றி
கூறினார்.