சீரான மின் விநியோகம் கோரி சாலை மறியல்

மன்னார்குடி அருகே உள்ள பெருகவாழ்ந்தானில் தொடர் மின் தடையைக் கண்டித்தும், சீரான மின் விநியோகம்

மன்னார்குடி அருகே உள்ள பெருகவாழ்ந்தானில் தொடர் மின் தடையைக் கண்டித்தும், சீரான மின் விநியோகம் வழங்கக் கோரியும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
 பெருகவாழ்தான் கடை வீதியில் உள்ள மின்மாற்றி செப்.17-ஆம் தேதி பழுதடைந்ததையடுத்து, மின் விநியோகம் பாதிக்கப்பட்டு, அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புதன்கிழமை முழுமையாக மின் விநியோகம் தடை பட்டதால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும், வர்த்தகர்களும் மன்னார்குடி-முத்துப்பேட்டை பிரதான சாலை பெருகவாழ்ந்தான் கடைவீதியில் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். திமுக கோட்டூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.ஆர்.தேவதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பழுதடைந்த மின்மாற்றியை சீரமைத்து, தடையின்றி மின் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மின்வாரிய இளநிலைப் பொறியாளர் பிரபு, மண்டல துணை வட்டாட்சியர் சந்திரமோகன் ஆகியோர் நிகழ்விடத்துக்குச் சென்று, பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com