மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பிரசாரக் கூட்டம்

முத்துப்பேட்டை ஆசாத் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தெருமுனைப் பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முத்துப்பேட்டை ஆசாத் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தெருமுனைப் பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
"மக்கள் உரிமைக்காக குரல் கொடுப்போம், அரசின் அடக்குமுறைகளை முறியடிப்போம்' என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் செல்லத்துரை தலைமை வகித்தார். 
மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, மாவட்டக் குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசினர்.
கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வீரசேகரன்,  உப்பூர் ராஜேந்திரன், விவசாய சங்க ஒன்றியத் தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com