திருவாரூர் அருகே உள்ள தனது பாட்டி அஞ்சுகத்தம்மாள் நினைவகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஞாயிற்றுக்கிழமை மலரஞ்சலி செலுத்தினார்.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், காட்டூரில் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவகம் உள்ளது. இங்கு, முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார்.
பின்னர், தனது பாட்டியான அஞ்சுகத்தம்மாள் நினைவகத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன், அவரது மகன் துரைதயாநிதி மற்றும் ஆதரவாளர்கள் வந்திருந்தனர். அஞ்சலி செலுத்தியபின், நினைவிடம் அமைந்துள்ள அப்பகுதியை சுற்றிப்பார்த்துவிட்டு, அங்கிருந்து
புறப்பட்டுச் சென்றார்.