பாட்டி நினைவகத்தில் மு.க.அழகிரி அஞ்சலி

திருவாரூர் அருகே உள்ள தனது பாட்டி அஞ்சுகத்தம்மாள் நினைவகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஞாயிற்றுக்கிழமை மலரஞ்சலி செலுத்தினார்.

திருவாரூர் அருகே உள்ள தனது பாட்டி அஞ்சுகத்தம்மாள் நினைவகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஞாயிற்றுக்கிழமை மலரஞ்சலி செலுத்தினார்.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், காட்டூரில் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவகம் உள்ளது. இங்கு, முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார்.
பின்னர், தனது பாட்டியான அஞ்சுகத்தம்மாள் நினைவகத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன், அவரது மகன் துரைதயாநிதி மற்றும் ஆதரவாளர்கள் வந்திருந்தனர். அஞ்சலி செலுத்தியபின், நினைவிடம் அமைந்துள்ள அப்பகுதியை சுற்றிப்பார்த்துவிட்டு, அங்கிருந்து
புறப்பட்டுச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com