கால்நடை மருத்துவரிடம் சங்கிலி பறிப்பு

மன்னார்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கால்நடை மருத்துவரை வழி மறிந்து, இரண்டரை பவுன் சங்கிலியை

மன்னார்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கால்நடை மருத்துவரை வழி மறிந்து, இரண்டரை பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
மன்னார்குடி நடராஜப்பிள்ளைதெருவைச் சேர்ந்தவர் க. குணசேகரன்(60). இவர், அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி, ஓய்வுபெற்றுள்ளார். இவர், ஞாயிற்றுக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் மன்னார்குடி-கும்பகோணம் சாலையில் ரொக்ககுத்தகை என்ற பகுதியில் சென்றபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் குணசேகரனை வழிமறித்து, அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து, மன்னார்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com