திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியராக த. ஆனந்த் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். 

திருவாரூர் மாவட்ட ஆட்சியராக த. ஆனந்த் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். 
திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த இல.நிர்மல்ராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு மாற்றப்பட்டார். இதேபோல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநராக பதவி வகித்த த. ஆனந்த் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை வந்த த. ஆனந்த், மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
  2009- ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்த இவர், திருக்கோவிலூர் சார் ஆட்சியர், திருவண்ணாமலை மாவட்ட உதவி ஆட்சியர், கூடுதல் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். பின்னர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநராக பொறுப்பு வகித்த த. ஆனந்த் தற்போது திருவாரூர் மாவட்ட ஆட்சியராக
பொறுப்பேற்றுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com