நன்னிலம் பகுதியில் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு

பிஎஸ்என்எல் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நன்னிலம் பகுதியில் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் பிஎஸ்என்எல் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

பிஎஸ்என்எல் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நன்னிலம் பகுதியில் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் பிஎஸ்என்எல் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. 
பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் புதன்கிழமை வரை 3 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நன்னிலம், பூந்தோட்டம், பேரளம், கொல்லுமாங்குடி போன்ற பகுதிகளில் பிஎஸ்என்எல் நிறுவன தொலைப்பேசிகள் மட்டுமன்றி பிஎஸ்என்எல் இணைய சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இந்த வேலை நிறுத்தத்தால் பல வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் இ-சேவை மையங்கள் மற்றும் அலுவலகங்களில் பொதுமக்களுக்கான சேவை முடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com