திருவாரூர் அருகேயுள்ள அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தாய்மொழி நாள் விழா நடைபெற்றது.
அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ்த் துறை, எழுத்தோலை தமிழ் கையெழுத்து பயிற்சி மையம் ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்தின. பள்ளித் தலைமையாசிரியர் முருகபூபதி தலைமையில் நடைபெற்ற விழாவில், மாணவர்களுக்கு கையெழுத்து பயிற்சி தொடர்பாக போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். விழா நிறைவில் ஜிஆர்எம் மகளிர் மேல்நிலைப் பள்ளி முதுகலை தமிழாசிரியர் சண்முகவள்ளி கையெழுத்துப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், எழுத்தோலை தமிழ்க் கையெழுத்து மையத்தின் முதன்மை பயிற்றுநரும், தமிழாசிரியருமான தமிழ்க்காவலன், பள்ளியின் தமிழாசிரியர் சந்தான லெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.