அச்சுதமங்கலம் அம்மன் கோயிலில் தை மாத பௌர்ணமி யாகம்

நன்னிலம் அருகே உள்ள அச்சுதமங்கலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வேம்படி தேவி கருமாரியம்மன் கோயிலில் தை மாத பெளர்ணமி யாகம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் அருகே உள்ள அச்சுதமங்கலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வேம்படி தேவி கருமாரியம்மன் கோயிலில் தை மாத பெளர்ணமி யாகம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் இக்கோயிலில் தை மாத பௌர்ணமி பூஜை நடத்தப்படுவது வழக்கம்.  அதன்படி,17-ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு,  குடும்பப் பிரச்னைகள், தொழில் பிரச்னைகள், கடன் பிரச்னைகள் தீர வேண்டியும், குழந்தை பாக்கியம் மற்றும் கல்வி செல்வம் வேண்டியும் வழிபட்டனர்.
தொடர்ந்து, பிப்.19 தேதி நடைபெற உள்ள மாசி மாத பால்குட விழாவுக்காக பக்தர்கள் விரத மாலை அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சிவக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com