சபரிமலையில் பாரம்பரிய முறையைப் பின்பற்ற வேண்டும், ஐதீகத்தை காக்க வேண்டும் என வேண்டி மேலகரத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மேலகரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மேலகரம் ஈஸ்வரன், தென்காசி நகர பாஜக தலைவர் திருநாவுக்கரசு, குற்றாலம் நகர பாஜக தலைவர் செந்தூர்பாண்டியன், ஐயப்ப குருசாமிகள் சிதம்பரம், முருகன், சுப்பிரமணியன் மற்றும் ஐயப்ப பக்தர்கள், முருக பக்தர்கள், சிவனடியார்கள், ஓம்சக்தி வழிபாடு அமைப்பினர் கலந்துகொண்டனர்.