திருநெல்வேலியில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ. 16) நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ. 16) முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது.
இக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்று விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர். விவசாயிகள் பங்கேற்று தங்களது மனுக்களை அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.