பாளையங்கோட்டையில் நவம்பர் 17 மின் தடை

பாளையங்கோட்டை மற்றும் சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை மற்றும் சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி நகர்ப்புற செயற்பொறியாளர் (விநியோகம்) சு. முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர், ரஹ்மத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்தி நகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளையங்கோட்டை மார்க்கெட், திருச்செந்தூர் சாலை, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், மகாராஜ நகர், தியாகராஜ நகர், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, அன்புநகர், பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு, பொறியியல் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான் குளம், செங்குளம் புதுக்குளம், இட்டேரி, தாமரைச் செல்வி, திருவனந்தபுரம் சாலை, முருகன்குறிச்சி, மேலப்பாளையம், கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், சென்னல்பட்டி, நடுவக்குறிச்சி, வல்லநாடு, செய்துங்கநல்லூர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com