களக்காட்டில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
களக்காடு பேரூராட்சி மற்றும் கோமதி அருள்நெறி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவை இணைந்து டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர். திருநெல்வேலி மண்டல டெங்கு காய்ச்சல் தடுப்புப் பிரிவு அலுவலர் வாசுதேவன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் பங்கேற்றவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. இதில், பேரூராட்சி செயல் அலுவலர் சுஷமா, சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.