பாளை.யில் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

பாளையங்கோட்டையில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு மனிதச் சங்கிலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு மனிதச் சங்கிலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குழந்தைத் தொழிலாளர் தடுப்பு திட்டம் (1098) சார்பில்,  பாளையங்கோட்டை பேருந்து நிலையம் முதல் மேட்டுத்திடல் சாலையில் மனிதச்சங்கிலி நடைபெற்றது. குழந்தைத் தொழிலாளர் தடுப்பு திட்ட இயக்குநர் ஜெயபால் தலைமை வகித்தார். குழந்தைத் தொழிலாளர் தடுப்பு திட்ட நலக்குழுத் தலைவர் நளன், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் சந்திரகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் சரஸ்வதி ஆகியோர் பேசினர்.  விழிப்புணர்வு பதாகைகளுடன் கல்லூரி மாணவர்-மாணவிகள் மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com