சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் புரட்சி குறித்த சிறப்புக் கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்கில் மாநில செயற்குழு உறுப்பினரும், எழுத்தாளருமான மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.வேலுமயில், உ.முத்துப்பாண்டியன்,பி.ஜெயராஜ், டி.கணபதி, இடைக் கமிட்டி செயலர்கள் பி.அசோக்ராஜ், எஸ்.அயூப்கான், தங்கம், வேணுகோபால், நடராஜன், கணேசன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். கருத்தரங்கில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள், கிளைச் செயலர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.