புளியங்குடி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
புளியங்குடி அருகே முள்ளிக்குளத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மனைவி கிருஷ்ணவேணி (34). இவர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மாடி வழியாக வீட்டினுள் புகுந்த மர்மநபர் கிருஷ்ணவேணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி விட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் புளியங்குடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.