நெல்லை கம்பன் கழகத்தின் 451 ஆவது தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை அருள்மிகு ராமசாமி கோயில் வளாகத்தில் உள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேராசிரியர் த.கு. சவுந்தரராஜன் தலைமை வகித்தார். மருத்துவர் இளங்கோவன் செல்லப்பா இறைவணக்கம் பாடினார். பே.சங்கரபாண்டியன் வரவேற்றார்.
"கைகேயி என்னும் நல்லவள்' என்ற தலைப்பில் கோவில்பட்டி நல்லாசிரியர் கு.ராசாமணியும், "யுத்த காண்டம்' என்ற தலைப்பில் பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தியும் சொற்பொழிவாற்றினர்.
முனைவர் பாண்டியன், ந.சு.சங்கரன், பேச்சிமுத்து, சேதுமாதவன், கருடப்பன், சரவணசெல்வன், தங்க மாரியப்பன், பொன்னுக்கனி, வள்ளி, உசா உள்பட பலர் கலந்துகொண்டனர். கழகச் செயலர் பொன்.வேலுமயில் நன்றி கூறினார்.