சுத்தமல்லியில் திருவள்ளுவர் கழகம் சார்பில் இலக்கிய நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாதாந்திர இலக்கிய நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியர் கண்ணன் தலைமை வகித்தார். திரவியம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், திருக்குறள் தந்த நடுவுநிலைமை எனும் தலைப்பில் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி பேசினார்.
புலவர் வீ. செந்தில்நாயகம் கருத்துரை ஆற்றினார். திருக்குறளின் சிறப்புக் குறித்து இராமன், ராசிகா, வீரமனோஜ் ஆகியோர் பேசினர்.
ஓய்வுபெற்ற காவல்ஆய்வாளர் இளங்கோ, கவிஞர் சக்திவேலாயுதம், பத்தமடை கந்தசாமி, அஞ்சல் பணியாளர் திரவியம், இ.பி. முருகன், சண்முகசுந்தரி, தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் வரவேற்றார். செயலர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.