கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

பாளையங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

பாளையங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
சிவந்திப்பட்டி அருகேயுள்ள ஆலங்குளம் இட்டேரி கீழத் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி இசக்கியம்மாள் (28). கணவன்-மனைவி இருவரும்  அருகன்குளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனர். பின்னர் அங்கிருந்து கீழநத்தம் நான்குவழிச்சாலை பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் இசக்கியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியைப் பறிக்க முயன்றனராம். 
ஆனால், இசக்கியம்மாள் பிடித்துக் கொண்டதால் 2 பவுன் தங்கச்சங்கிலியுடன் அவர்கள் தப்பினராம். இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com